வெள்ளை வேன் கடத்தலானது சனல் 4 வினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதையாம்

279 0

92c3523de61d06eebdc515f2babb64b9_lவெள்ளை வேன் கடத்தலானது செனல் 4 வினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதை என நடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,கடந்த ஆட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளை வேன் கடத்தல் என்பது உண்மையாகவே நடந்த சம்பவம் இல்லை. புலம்பெயர் அமைப்பு மற்றும் செனல் 4 என்பவற்றினால் சித்தரிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.

மேலும், மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஊழல்களுக்கான சகல ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சார்பில் தொடர்ந்தும் அழுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

தற்போதுள்ள அரசாங்கமானது சில வாகனங்களை கண்டுபிடித்து வைத்துக்கொண்டு அது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறான சிறிய ஊழல்களுக்காக சிரமப்படும் அரசாங்கம் மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஊழலுக்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருப்பது தவறான விடயம் என பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.