கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் படகில் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

தற்போது பெய்து வருகின்ற கன மழை காரணமாகக் கிளிநொச்சியின் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவரும் மாணவர்கள் சில பகுதிகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி இந்தக்கல்லூரிக்குப் பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பாடசாலையினை சுற்றி வெள்ளம் காணப்படுவதனாலும் இராணுவத்தினரால் படகு மூலம் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டுள்ளனர்.



