ஆவா குழுவுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பில்லை – சரத் பொன்சேகா

264 0

sarathfonsekaயாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லையென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அதேபோல் இராணுவமும் முன்னாள் போராளிகளை வைத்து, ஆவா கும்பலைப் போன்ற ஒரு கும்பலை இயக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்பகுதியில் கடந்த சில நாட்களாக பெரிதாக பேசப்பட்டுவரும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா கும்பல் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவிடம் கேட்டபோது, இராணுவத்திற்கும், ஆவா குழுவிற்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு அதை விடவும் வேறு பணிகள் உள்ளன. தோல்வியடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களையோ தமது தேவைகளுக்குப் பயன்படுத்துவதானது கேலிக்குரிய விமர்சனமாகும்.

புனர்வாழ்வுப் பெற்ற போராளிகளில் யாராவது சட்டவிரோத செயல்களில் ஈடுபட உந்தப்பட்டால் சட்டத்திற்கு விரோதமாக எழுந்தால் அவர்களே தமது எதிர்காலத்தை பழாக்கிக்கொள்ளவே முயற்சிப்பதாக அமைந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.