இன்று (03) காலை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 இந்திய பிரஜைகளும் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இந்நாட்டில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.