திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் நடைபெறும் அபிஷேக சேவைகளால் 600 ஆண்டு பழமையான உற்சவர் சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிவில் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பொன்னால் செய்யப்பட்ட உற்சவர் மலையப்ப சாமி சிலை உள்ளது. பிரம்மோற்சவ மற்றும் விழா காலங்களில் இந்த உற்சவ மூர்த்தி மாடவீதிகளில் எழுந்தருளுகிறார்.
மலையப்ப சாமி சிலைக்கு தினமும் திருமஞ்சனம், வானகுளியல் செய்யப்படுகிறது. மேலும் திங்கட்கிழமைகளில் சகஸ்ர கலசஅபிஷேகம் புதன்கிழமை வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகள் நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபல தீட்சிதுலு தலைமையிலான அகமா குழுவினர் கோவிலில் உள்ள சிலைகளை ஆய்வு செய்தனர்.
அப்போது உற்சவர் மலையப்ப சாமி சிலையில் அடிப்பகுதியிலும் உச்சியிலும் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்தனர்.
மேலும் உற்சவர் சிலை முகம், கண்கள், வாய், சங்கு சக்கரம், விரல்கள், இடுப்பு பகுதி சுருங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமஞ்சனம், வான குளியல் ஆகியவை விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.
உற்சவ சிலைக்கு செய்யப்படும் சகஸ்ர கலச அபிஷேகம், நித்திய வசந்தோற்சவம் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் சில ஆர்ஜித சேவைகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என இந்த குழு தேவஸ்தானத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து முகம், கண்கள், காதுகள், கால்கள் சுற்றுப்பகுதிகளில் சிறிய பழுது பார்ப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலையை பழுது பார்க்க தடை செய்யப்பட்டுள்ளது.
அகமா குழுவினரின் பரிந்துரை குறித்து அடுத்த மாதம் நடைபெறும் திருமலை திருப்பதி தேவஸ்தான கூட்டத்தில் ஆலோசிக்க படஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

