இந்திய வெளிவிகார அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி கோத்தா

214 0

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றைய தினம் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பரஸ்பர நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டன.

இந்த சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி கோத்தா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று நேற்றைய தினம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து இந்திய மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்பு அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.