பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய திட்டங்கள் இடைநிறுத்தம் –

227 0

முறையான விசாரணை நடைபெறும் வரை பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதி திட்டம் மற்றும் டெப் வழங்குவதை நிறுத்திவைப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த திட்டங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் அவை தொடர்பாக விசாரணைகள் நடைபெறும் வரை நிறுத்திவைப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் இந்த திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் வெளியாகியன.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.