புதிய அத்தியாயம்!

396 0

இலங்­கையின்  ஏழா­வது  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட  ஜனா­தி­ப­தி­யாக  முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்தாபய ராஜ­பக்ஷ நேற்று  வர­லாற்று சிறப்புமிக்க அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சாய வளா­கத்தில்  பத­வி­யேற்­றுக்­கொண்டார்.   நடந்து முடிந்த 8ஆவது  ஜனா­தி­பதித் தேர்­தலில்  6924255  வாக்­கு­களைப்   பெற்ற  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ 52.25 வீதத்­துடன்   வெற்­றி­வாகை சூடி­யி­ருக்­கிறார். மிகவும்  பர­ப­ரப்­பா­கவும்  கடு­மை­யான போட்­டிக்கு மத்­தி­யிலும் நடை­பெற்ற இந்த தேர்­தலில்  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷவை    நாட்டு   மக்கள்  மிக அமோ­க­மாக  ஆத­ரவளித்து வாக்­கு­களை அள்ளி வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

 

இந்த நாட்டின் புதிய ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்­றுள்ள ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷமுன்­னி­லையில் பல்­வேறு சவால்கள் காணப்­ப­டு­கின்­றன.  அவற்றை  முறி­ய­டித்து நாட்டை  முன்­னேற்­றப்­பா­தையில் கொண்­டு­செல்­வதில்  ஜனா­தி­பதி   கோத்தாபய ராஜ­பக்ஷ  அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­ வேண்­டி­யி­ருக்­கின்­றது.

தேர்­தலில் வெற்றி அறி­விக்­கப்­பட்­ட­வுடன் உரை­யாற்­றிய  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ எனக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும்  வாக்­க­ளித்த அனைத்து மக்­க­ளுக்கும்   ஜனா­தி­ப­தி­யாக பார­பட்­ச­மின்றி சிறந்த சேவை­யாற்­றுவேன் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  மக்கள் என்­ மீது கொண்ட நம்­பிக்­கையை முழு­மை­யாக நிறை­வேற்­றுவேன்.  நான் தேர்தல் பிர­க­ட­னத்தில் முன்­வைத்த  விட­யங்கள் அனைத்தும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.  அனை­வரும்  இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் எவ்­வித பார­பட்­சமுமின்றி நடத்­தப்­ப­டு­வார்கள் என்றும்   புதிய ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்ற  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ வெளி­யிட்ட இந்த கருத்­துக்கள் நம்­பிக்­கையை  ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.   ஜனா­தி­பதி அதற்­கேற்­ற­வ­கையில்  அவர்­மீது வைத்­துள்ள  எதிர்­பார்ப்­பையும் நம்­பிக்­கை­யையும்  நிறை­வேற்­றுவார் என மக்­களும் நம்­பிக்கை  வைத்­துள்­ளனர்.  அத­னா­லேயே  இந்­த­ளவு பாரிய வெற்­றியை வழங்­கி­யுள்­ளனர்.

நடந்து முடிந்த இந்தத் தேர்­தலின் முடி­வுகள்   பல்­வேறு  செய்­தி­களை வழங்­கு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.  தென்­னி­லங்கை முழு­வதும்    ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷவுக்கு   முழு அளவில் மக்கள் ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கின்­றனர். அதே­போன்று  வடக்கு, கிழக்கில்   புதிய ஜன­நா­ய­க முன்­ன­ணியின்   ஜனா­தி­பதி  வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு  மக்கள் ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கின்­றனர்.

எனினும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில்  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ­வுக்கு அதி­க­மான  வாக்­குகள்  கிடைக்­க­வில்லை என்ற போதிலும் அங்கும்  மக்­களின் ஆத­ரவு  அவ­ருக்கு இருந்­தி­ருக்­கி­றது. இரண்டு மாகா­ணங்­க­ளிலும்   ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ ­வுக்கு   ஒப்­பீட்­ட­ளவில் குறை­வாக இருப்­பினும் குறிப்­பி­டத்­தக்களவில்  வாக்­குகள் கிடைத்­தி­ருக்­கின்­றன.  யாழ். மாவட்­டத்தில்  23261 வாக்­கு­க­ளையும்  வன்னி மாவட்­டத்தில் 26105  வாக்­கு­க­ளையும்  ஜனா­தி­பதி  பெற்­றி­ருக்­கின்றார்.

அதே­போன்று   அம்­பாறை மாவட்­டத்தில்   135058  வாக்­கு­க­ளையும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 38460 வாக்­கு­க­ளையும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 54135 வாக்­கு­க­ளையும்  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷபெற்­றி­ருக்­கின்றார்.

அதே­போன்று  மலை­ய­கத்­திலும்   தமிழ் மக்­களின் ஆத­ரவு ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷவுக்கு கணி­ச­மாக கிடைத்­தி­ருக்­கின்­றது. நுவ­ரெ­லியா மஸ்­கெ­லிய தொகு­தியில் 75ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட வாக்­குகள் ஜனா­தி­ப­திக்கு கிடைத்­தி­ருக்­கின்­றன.  இவ்­வாறு    ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷவுக்கு வடக்கு, கிழக்கில் ஒப்­பீட்டு ரீதியில்  அதி­க­ள­வான வாக்­குகள் கிடைக்­கா­வி­டினும்கூட அப்­ப­கு­தி­களின் மக்­களின் ஆத­ரவு அவ­ருக்கு  இருந்­தி­ருக்­கின்­றது என்­பதை மறுக்க முடி­யாது.

இந்த  சூழலில் புதிய ஜனா­தி­ப­திக்கு   நாட்டை முன்­கொண்டு செல்­வதில் பல சவால்கள் இருக்­கின்­றன என்­பதை  ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.  புதி­தாக ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ள கோத்தாபய ராஜ­பக்ஷ இதற்கு முன்னர் சுமார் ஒன்­பது வரு­டங்கள் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்­தவர்.  யுத்­தத்தை  முடிப்பதற்கு பாரிய பங்­க­ளிப்பை வழங்­கி­யவர்.  எனவே அவர்   இந்த நாட்டை சிறந்த முறையில் முன்­னோக்கி கொண்­டு­செல்வார் என்ற எதி­பார்ப்பு நாட்டு மக்­க­ளினால் அவர் மீது வைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதே யதார்த்­த­மாகும்.

உண்­மையில்  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் வேட்­பா­ளரை    மக்கள் நிரா­க­ரித்து ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷவை   பாரியளவில்  ஆத­ரித்­த­மைக்கு என்ன கார­ணங்கள் என்பது தொடர்பில்   ஆரா­ய­வேண்­டி­யி­ருக்­கி­றது. அதற்கு பல்­வேறு கார­ணங்கள் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. மிக முக்­கி­ய­மாக   கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இந்த நாட்டில்   இடம்­பெற்ற   குண்­டுத்­தாக்­கு­த­லினால் மக்கள் மனங்­களில் ஏற்­பட்ட ஒரு அச்ச உணர்வைக் குறிப்­பி­டலாம். முழு உல­கையே உலுக்­கிய  இந்த தாக்­கு­த­லின் தாக்கம் மக்­களை பாரி­ய­ளவில் பாதித்­துள்­ளது. இந்த தாக்­கு­­தல்கள்  இடம்­பெற்ற பின்னர் சில வாரங்கள் மக்கள்   பிள்­ளை­களை பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பாமல் இருந்­தனர். அந்தள­விற்கு பாது­காப்பு தொடர்­பாக ஒரு அச்சம்  மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த சூழலில்   ஜனா­தி­பதி  தேர்­தலில் போட்­டி­யிட்ட இரண்டு பிர­தான வேட்­பா­ளர்கள் தொடர்­பிலும் பல்­வேறு அனு­மா­னங்­களை செய்­தி­ருக்­கலாம்.  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷஇந்த நாட்டின் பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்­த­போது நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த எடுத்த நட­வ­டிக்­கைகள் தொடர்பில்  பாரி­ய­தொரு நம்­பிக்கை  மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே மக்கள்  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷவுக்கு   முழு­மை­யான ஆத­ரவை  அளித்­தி­ருக்­கலாம். அது­மட்­டு­மன்றி  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷதமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இவ்­வா­றான குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெ­று­வ­தற்கு தனது   ஆட்­சியில் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற உறு­தியை வழங்­கி­யி­ருந்தார்.  அதே­போன்று   கடந்த காலத்தில் பாது­காப்பு பல­வீ­ன­மாக  காணப்­பட்­ட­தா­கவும்  அது  மீண்டும் பலப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் அவர்  எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார். அதே­போன்று    உயிர்த்த ஞாயிறு தொடர்பில்  விசா­ரித்து பொறுப்பை தட்­டிக்­க­ழித்­த­வர்கள் தொடர்­பாக  ஆராய சகல  அதி­கா­ரங்­களும் கொண்ட ஒரு சுயா­தீன ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு  நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ  தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

எனவே  நாட்டு மக்கள் மத்­தியில்   இந்த விடயம் ஒரு பெரும்  செல்­வாக்கை செலுத்­தி­யி­ருக்­கி­றது.  பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய அதனை கடந்த காலத்தில் செய்­து­காட்­டிய ஒரு­வரை     நாட்டின் தலை­வ­ராக தெரிவு செய்­ய­வேண்டும் என்ற தீர்­மா­னத்தை  மக்கள்   பெரு­வா­ரி­யாக எடுத்­தி­ருப்­பதை காண­மு­டி­கின்­றது.  அதே­போன்று   கடந்த  நான்­கரை வரு­ட­கா­ல­மாக  நாட்டின் பொரு­ளா­தாரம்  பாரிய   கெடு­பி­டி­களை சந்­தித்­தி­ருக்­கின்­றது. பொரு­ளா­தார வளர்ச்­சி­வீ­த­மா­னது குறைந்த மட்­டத்­தி­லேயே காணப்­பட்­டது. ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­தலை யடுத்து வெளி­நாட்டு  முத­லீ­டுகள் மற்றும் சுற்­று­லாத்­துறை என்­பன பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்­தன.  எனவே  இந்த அனைத்து விட­யங்­களும்    மக்­களின்    புதிய ஜனா­தி­பதி தெரிவில் செல்­வாக்கு செலுத்­தி­யி­ருக்­கின்­றன என்­பது மிக முக்­கி­ய­மாகும்.

மேலும் முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த  ராஜ­பக் ஷவின் மக்கள் செல்­வாக்கும்  முக்­கிய கார­ண­மாகும். மஹிந்த  ராஜ­பக்ஷ   பெரும்­பாலும் அனைத்து பிர­சாரக் கூட்­டங்­க­ளிலும் கலந்­து­கொண்டு  உரை­யாற்­றினார்.  அத்­துடன்   ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஸ்தாப­கரும் அதன் தேசிய அமைப்­பா­ள­ரு­மான  பஷில்  ராஜ­பக் ஷவின் ஒருங்­கி­ணைப்பு  மற்றும்  திட்­ட­மி­டல்கள் என்­ப­னவும்   ஜனா­தி­ப­தியின் வெற்­றியில் முக்­கிய பங்கை ஆற்­றி­யுள்­ளன.

இதே­வேளை  புதிய  ஜனா­தி­பதி மீது மக்கள் மத்­தியில் பாரிய  எதிர்­பார்ப்­புக்கள் பல்­வேறு விட­யங்­களில் காணப்­ப­டு­கின்­றன.    கல்­வித்­துறை தொடர்­பாக கோத்தாபய ராஜ­பக்ஷ பல  வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருக்­கிறார். உயர்­த­ரப்­ப­ரீட்­சையில் பல்­க­லைக்­க­ழக தகு­தி­பெறும் அனை­வ­ருக்கும்   அந்த சந்­தர்ப்­பத்தை பெற்­றுக்­கொ­டுக்க  நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்  என்று வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருக்­கிறார்.  எனவே அது­ தொ­டர்­பான  நட­வ­டிக்­கைகள் புதிய ஜனா­தி­ப­தி­யினால் அடுத்த கட்­ட­மாக  முன்­னெ­டுக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நாட்டின் இளைஞர், யுவ­திகள்    ஜனா­தி­பதி கோத்­த­பாய  மீது பாரிய நம்­பிக்கை வைத்­தி­ருப்­பதை காண முடி­கின்­றது.  அவர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் ஆராய்ந்து  சரி­யான நேர்த்­தி­யான தீர்க்­க­மான  கொள்­கை­களை உரு­வாக்க  புதிய ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.   புதிய  தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வதன் மூலம் வேலை­யின்­மையை  குறைப்­ப­தற்கும் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு பல்­வேறு வகை­யி­லான தொழில் பயிற்­சி­களை வழங்­கு­வ­தற்கும்  புதிய ஜனா­தி­பதி  நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

இவை தொடர்­பாக  ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷமுன்­வைத்­துள்ள யோச­னைகள் வாக்­கு­று­திகள் மக்­களை கவர்ந்­துள்­ளன. அத­னா­லேயே இவ்­வாறு ஒரு பாரிய மகத்­தான  மக்கள் ஆணை அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மேலும்  மலை­யக மக்­க­ளுக்கு  1000 ரூபா சம்­பளம் வழங்­கப்­படும் என்று வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  அந்த வாக்­கு­றுதி  விரை­வாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். அதே­போன்று இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ்  32 கொள்­கை­த்திட்­டங்­களை  ஜனா­தி­ப­தி­யிடம் முன்­வைத்­தி­ருந்­தது. அவற்றை அவர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்தார்.    இதனால்  மலை­யக மக்­களின் கணி­ச­மான ஆத­ரவு புதிய ஜனா­தி­ப­திக்கு கிடைத்­தி­ருக்­கின்­றது.

இந்­நி­லையில் மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளப் பிரச்­சினை உள்­ளிட்ட அனைத்து அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கும் சரி­யான தீர்­வு­களை புதிய ஜனா­தி­பதி வழங்­குவார் என  மக்கள் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர்.  இது இவ்­வாறிருக்க  வடக்கு, கிழக்கு  மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  அவ­தானம் செலுத்­த­வேண்டியிருக்­கி­றது.  தனது விஞ்­ஞா­ப­னத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தாக  ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.  எனவே  அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கும்­போது நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும்  தேசிய பிரச்­சி­னைக்­கான  தீர்வு குறித்தும் புதிய ஜனா­தி­பதி  கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  அது­மட்­டு­மன்றி   காணாமல் போனோர்    தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்வு அர­சியல் தீர்வு, அர­சியல் கைதி­களின் தீர்வு என   பல விட­யங்கள் குறித்து புதிய ஜனா­தி­பதி கவனம் செலுத்­த­வேண்­டி­யி­ருக்­கி­றது.

மேலும்  வடக்கு, கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மற்றும் பொரு­ளா­தார ரீதியில் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்ள மக்கள் தொடர்­பா­கவும்   அவர்­க­ளுக்­கான  வாழ்­வா­தார உத­விகள் தொடர்­பா­கவும்  கவனம்  செலுத்­த­வேண்டும். விசே­ட­மாக  கண­வனை இழந்த பெண் குடும்பத் தலை­விகள் தமது குடும்­பத்தை கொண்டு நடத்­து­வ­தற்­கான வாழ்­வா­தார ஏற்­பாடு செய்து கொடுப்­பது அவ­சி­ய­மாகும்.

இவ்­வாறு   பல்­வேறு விட­யங்கள் குறித்து புதிய ஜனா­தி­பதி அவ­ச­ர­மாக கவனம் செலுத்த வேண்டும்.   இந்தப் பிரச்­சி­னை­களை ஆராய்ந்து   தீர்­வு­காண்­பது என்­பது   இல­கு­வான விட­ய­மல்ல. பல்­வேறு சவால்­களை புதிய ஜனா­தி­பதி எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. ஆனால் அந்த சவால்­களை முறி­ய­டித்து  அந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பதில்  புதிய ஜனா­தி­பதி    வெற்­றி­காண்பார் என  மக்கள்  எதிர்­பார்க்­கின்­றனர்.  அந்த எதிர்­பார்ப்பை  ஜனா­தி­பதி பூர்த்தி செய்­ய­வேண்டும்.

கடந்த காலத்தில்    இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை குழப்­பவும்  தேசிய ஒற்­று­மையை குழப்­பவும் சில விஷ­மிகள் முயற்­சித்­தி­ருந்­தன. அவ்­வா­றான முயற்­சிகள் எதுவும்  இனி­வரும் காலங்­களில்   எந்தத்தரப்­பி­ன­ராலும்  முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இந்த விட­யத்தில் புதிய  ஜனா­தி­பதி முன் பாரி­ய­தொரு பொறுப்பு உள்­ளது என்­பதே  யதார்த்­த­மாகும்.

கடந்த காலங்­களில் நாட்டில் இடம்­பெற்ற பல்­வேறு பிரச்­சி­னை­க­ளினால் விரக்தி அடைந்த மக்கள் தற்­போது புதிய ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ­வுக்கு மிகப்­பெ­ரிய அங்­கீ­கா­ரத்தை மற்றும்  மக்கள் ஆணையை வழங்­கி­யி­ருக்­கின்­றார்கள். அந்த  மக்­களின் ஆணையை ஜனா­தி­பதி   சரி­யாக பயன்­ப­டுத்தி  மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண வேண்டும். ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக்ஷ வறுமையை ஒழித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக தனது தேர்தல் பிரசார காலத்தில் மிக அதிகளவில் பேசியிருக்கிறார். அந்த வகையில் நாட்டில் வறுமையை ஒழித்து மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கான   வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். அதேபோன்று  தகவல் தொழில்நுட்பத்துறையில் எமது நாட்டை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான செயற்றிட்டங்கள்    இடம்பெறவேண்டும்.  ஜனாதிபதி கோத்தாபய ராஜ­பக்ஷ நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. அதனூடாக  மக்கள் ஆணையுடன் அரசாங்கமொன்று அமைக்கப்பட்டு நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும்.

சட்டம் ஒழுங்கு சரியான முறையில் நிலைநாட்டப்படும்  என்று  ஜனாதிபதி கோத்தாபய ராஜ­பக்ஷ பிரசாரக் காலத்தில் மிக அதிகமாக பேசியிருக்கிறார். எனவே நாட்டில் குற்றச்செயல்கள்  இடம்பெறாதவகையில் சட்டம் ஒழுங்கை சரியான முறையில் நிலைநாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் புதிய ஜனாதிபதியின் கீழ் முறையாக இடம்பெறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த இரண்டு மாதகாலமாக நாட்டின் அனைத்து தரப்பினரும்   ஜனாதிபதி  தேர்தல் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.   அனல் பறக்கும் பிரசாரங்கள் இடம்பெற்றன. தற்போது அனைத்து விடயங்களும் முடிவுக்கு வந்திருப்பதுடன் புதிய ஜனாதிபதியும்    நாட்டுக்கு தலைமை ஏற்றிருக்கின்றார். எனவே  புதிய ஜனாதிபதியின் தலைமையில் இந்த நாடு செழிப்பாக முன்னேறுவதற்கும்   அடிப்படை பிரச்சினைகள்   தீர்க்கப்படுவதற்கும்   ஜனாதிபதிக்கு   பலம் கிடைக்கவேண்டும்   என நாமும் வாழ்த்துகிறோம்.

ரொபட் அன்டனி