வயிற்றில் போதைபொருள் உருண்டைகள் – கென்ய நாட்டு பெண் கைது

206 0
கொகேய்ன் போதைப்பொருளுடன் இந்நாட்டுக்கு வந்த வௌிநாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் இருந்து வந்த கென்யா நாட்டு பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான குறித்த பெண்ணின் பயணப்பொதியில் இருந்து 30 கொக்கேய்ன் போதைப்பொருள் உருண்டைகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேகநபரான பெண் விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், அவரின் வயிற்றில் மேலும் கொகேய்ன் உருண்டைகள் இருப்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து, அவற்றை வௌியில் எடுப்பதற்காக குறித்த பெண் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் தொடர்பில் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் விடயங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலம் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.