தெரணியகல பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் மருத்துவமனையில் அனுமதி!

209 0

கேகாலை – தெரணியகல பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 3 பேர் தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக காரவனெல்லா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெரணியகல – நூரியவட்டா பகுதியில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், 21, 33, மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நூரியாவட்டா பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 34 வயது ஆண்கள் எனவும், அவர்கள் நாளை (திங்கட்கிழமை) அவிசாவெல்லா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை – தெரணியகல பகுதியில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல், ஒரு தரப்பினருக்கு வாக்களிக்க வேண்டுமென சிலர் அச்சுறுத்தியதாகவும், அதையும் மீறி தான் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களித்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்தோடு, வீடொன்றுக்குள் நுழைந்த சிலர், வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு ஆண் ஒருவரையும் கத்தியால் வெட்டியுள்ளனர்.