மன்னாரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!

304 0

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் மன்னார் மாவட்டத்திலும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றன.

மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) வாக்களிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் அடிக்கடி விஜயம் செய்து அவதானித்து வருகின்றனர்.

மேலும் மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காலை 10.45 மணியளவில் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.