25,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது

272 0

25,000 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் விசேட அதிரடிப் படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை உஸ்வெட்டகெய்யாவ தொழிற்சாலையிலிருந்து கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் குறித்த தொழிற்சாலை முகாமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்டுள்ள கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர்கள் மூவரும் வத்தளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.