பெரியாறு அணைக்கு நீர்வரத்துஅதிகரிப்பு

340 0

நீர்பிடிப்பில் பெய்த மழை காரணமாக பெரியாறு அணைக்கு நீர்வரத்து 4,837 கன அடியாக அதிகரித்துள்ளது.கடந்த 2 தினங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 1,464 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 4,837 கன அடியாக அதிகரித்தது. இதனால் அக். 29ம் தேதி 126.35 அடியாக இருந்த நீர்மட்டம் 128 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது. நீர்இருப்பு 4,244 மில்லியன் கன அடியாகும்.நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து தமிழகப்பகுதிக்கு நீர்திறப்பு 1,500 கன அடியில் இருந்து 1,640 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.மழையளவு (மி.மீ.,): தேக்கடி 25.6, பெரியாறு 20, கூடலுார் 34.2, உத்தமபாளையம் 32.1, வீரபாண்டி 22, மஞ்சளாறு 60, சண்முகாநதி அணை 41, சோத்துப்பாறை 64, வைகை 36.6, போடி 35.6, ஆண்டிபட்டி 49.4, பெரியகுளம் 70.