மினுவாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடித்தகம பிரதேசத்தில் 54,000 லீட்டர் (72 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொடை மேற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.
பேலியகொடை மேற்கு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று பகல் 1.20 மணியளவில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை மேற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.