ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமி கொலை: தலைமறைவான உறவினரை பிடிக்க போலீஸ் தீவிரம்

339 0

சென்னை ஆதம்பாக்கத்தில் 13 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வேதவல்லி (50). இவரது தம்பி பூபதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூபதி இறந்துவிட்டதால், தம்பி மகளான ஷோபனா (13) என்பவரை வேத வல்லி வளர்த்து வந்தார். ஷோபனா வுக்கு அடிக்கடி உடல்நிலை சரி யில்லாமல் போனதால் 5-ம் வகுப் புடன் படிப்பை நிறுத்திவிட்டார். நேற்று காலை வேதவல்லி வேலைக்காக தனியார் மருத்துவ மனைக்குச் சென்றார். அப்போது வீட்டுக்கு ஷோபனாவின் அக்கா மோனிஷா வந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது, உடலில் பல்வேறு இடங் களில் கத்திக் குத்து காயங்களுடன் ஷோபனா இருந்துள்ளார். உடனடியாக வேதவல்லிக்கு தகவலை தெரிவித்துவிட்டு, அருகில் இருந் தவர்களின் உதவியுடன் ஷோப னாவை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு, அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் துணை ஆணையர் பிரபாகர், மடிப் பாக்கம் உதவி ஆணையர் சவுரி நாதன், ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து ஷோபனாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக ஆதம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வேதவல்லியின் முத்த மகன் பாபு (26). சென்னை அயனாவரத் தில் வசித்து வருகிறார். வேத வல்லி தனது தம்பி மகள் ஷோபனா, 2-வது மகன் மாதவன் ஆகியோரு டன் வசித்துள்ளார். பாபு இந்த வீட்டை தனக்கு வேண்டும் என்று கேட்டு தாய் வேதவல்லியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

வேதவல்லி வீட்டை கொடுக்க மறுத்துள்ளார். அதே நேரத்தில், ஷோபனா மீது அதிக பாசத்துடன் இருந்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த பாபு வீட்டுக்கு வந்து தனி யாக இருந்த ஷோபனாவை கத்தி யால் குத்தி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய பாபுவை போலீஸார் தேடி வருகின்றனர்.