சமையல் எரிவாயுவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவை அதிக விலையில் விற்பனை செய்த பல வர்த்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில்தமது சபைக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க, அறிவுறுத்தியுள்ளார்.
முறைப்பாடுகளை, 1977 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு முன்வைக்க முடியும்.

