இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பொறுப்பற்ற கருத்துக்களால் போரை தூண்டுவதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பொறுப்பற்ற கருத்துக்களால் போரை தூண்டுவதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை சீர்குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சிப்பதாகவும் விமர்சித்து இருந்தார்.
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர், ‘இந்திய ராணுவ தளபதி தொடர்ந்து பொறுப்பற்ற கருத்துக்களை கூறி வருகிறார்.
,இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படை தளபதி (Chief of Defence Staff) பதவிக்கு அடிபோடும் நோக்கில், அவர் இவ்வாறு பேசி வருகிறார். இந்திய ராணுவ தளபதியின் பேச்சு போரை தூண்டும் வகையிலும், பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

