மன்னாரில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

538 0

download-6மன்னார் – பள்ளிமுனை மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய அன்ரன் டெனி என்பவர் நேற்று நள்ளிரவு முதல் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.இவரை பயங்கரவாத குற்றப்புலனாய்வப் பிரிவினரே கடத்திச்சென்றுள்ளதாக அவரது மனைவி மதுவந்தி தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மதுவந்தி தெரிவிக்கையில், தனக்கும் தனது கணவருக்கும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தநிலையில், பயம் காரணமாக சில காலங்கள் தனது கணவர் மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் தங்கியிருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக உயிலங்குளம் பங்குத்தந்தை லியோனின் பாதுகாப்பில் இருந்தநிலையில் நேற்று நள்ளிரவு காணாமல் போயுள்ளார்.

அன்ரன் காணாமல் போனமை தொடர்பாக மன்னார் மாவட்ட காவல்துறை நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Leave a comment