மத்தியவங்கி ஆளுநர்களாக 4பேரின் பெயர்கள் பரிந்துரை

2385 0

cbslமத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், யார் அடுத்த ஆளுநர் என அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் புதிய மத்திய வங்கி ஆளுநரைத் தெரிவு செய்வதற்காக நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தினேஸ் வீரக்கொடி, சரித ரத்வத்த, நந்தலால வீரசிங்க, பீ.சமரசிறி ஆகிய நான்குபேரின் பெயர்களே பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்று(புதன்கிழமை) சிறீலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் மத்தியவங்கி கட்டடத்தில் பல அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடலை நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில், பரிந்துரைசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் இன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் மந்திய வங்கி ஆளுநராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a comment