ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழீழ பகுதியில் முகாமிட்டுள்ள நாமல் குழுவினர்

306 0

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழீழ பகுதியில் முகாமிட்டுள்ள நாமல் குழுவினர் , மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல பகுதிக்கு சென்று தேர்தல் கால வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குப் பிச்சை கேட்டிருக்கிறார்கள்.

இன்று (புதன்கிழமை) பிற்பகல் குறித்த பகுதிக்கு சென்ற இன அழிப்புக் கூட்டத்தின் ஶ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் ஒட்டுக்குழு அங்கஜன் இராமநாதனும் சென்றிருந்தார்.

இதன்போது செஞ்சோலை சிறுவர் இல்ல காணியில் வசிப்போரின் சட்ட ரீதியான பிரச்சினைகள் தொடர்பாக தாம் மட்டுமே தீர்வை பெற்றுத் தரமுடியும் எனக்கூறிய நாமல் வரும் தேர்தலில் கோத்தாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

செஞ்சோலை வளாகத்தில் தங்களது விமானப்படை விமானங்களை வைத்து அப்பாவி மாணவர்களை கொலை செய்தவர்கள் என்ன முகத்துடன் எங்களிடம் வாக்குப் பிச்சை கேட்கிறார்கள் என பெரும்பாலான செஞ்சோலைக் குடியிருப்பாளர்கள் பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.