சட்டவிரோத கடல் அட்டைகளுடன் மூவர் கைது

171 0

மன்னாரில் உள்ள சவுத்பார் பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் 3 பேரை கடற்படையினர் நேற்று (12) காலை கைது செய்துள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடுக்கையின் போது, அனுமதி இல்லாமல் சேகரிக்கப்பட்ட இந்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு டிங்கி, ஒரு ஓபிஎம் மற்றும் 5 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 25, 27 மற்றும் 28 வயதுடைய மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், டிங்கி, ஓபிஎம், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் பிற மீன்பிடி கியர்கள் மன்னாரில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.