களுத்துறையில் இன்று நீர்வெட்டு

214 0

இலங்கை மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு இன்று (09) நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையான 12 மணித்தியாலங்கள் குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாத்துவை, வஸ்கமுவ, பொதுபிட்டிய, களுத்துறை (வடக்கு/தெற்கு), கட்டுகுருந்த, நாகொடை, பயாகல, பிலமினாவத்த, போம்புவல, மக்கொன, பேருவளை, கலுவாமோதர, மொரகல்ல, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பென்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.