இசுர தேவப்பிரிய கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவிப்பு

198 0

மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இன்று (06) ஹோமாகமயில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஹோமாகம கட்சிக் காரியாலய திறப்பு நிகழ்வு கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுர தேவப்பிரிய நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

நாளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது தீர்மானத்தை வெளியிடவுள்ள நிலையில், இவர் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளமை அரசியல் மட்டத்தில் சந்தேகங்களை கிளப்பியுள்ளன.