ஜனாதிபதித் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவு

216 0

2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவடைய உள்ளது.

அதேவேளை வேட்புமனுத் தாக்கலானது நாளை திங்கட்கிழமை காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

நாட்டின் மொத்த மக்கள் எண்ணிக்கை 21 மில்லியன். இவர்களுள்ள 15.6 மில்லியன் வாக்காளர்கள் இந்தத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 5 ஆம் திகதி மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள சகல வேட்பாளர்களும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிற்பகல் 2.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது தெளிவுபடுத்தப்பட உள்ளது.

வேட்புமனுத் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு நாளை காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இந்த நிகழ்வு அனைத்து தொலைக்காட்சி அலைவரிவைகளிலும் நேரடியாக ஒளிப்பரப்படும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். போட்டியிடும் வேடபாளாகள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை மூன்று மாதங்களுக்குள் பிகடனப்படுத்த வேண்டும். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்டும் வேட்பாளர் பதவி ஏற்பதற்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இதேவேளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் திங்கட்கிழமை அன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்திற்குள் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டும் .இந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கபட்டுள்ளன.

அத்துடன் அன்று பிற்பகல் 1.00 மணி வரை ராஜகிரிய சரண மாவத்தை மூடப்படுமென பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேர்தல் வரலாற்றில் முதல்துறையாக இலங்கை விமானப்படை தேர்தல் அலுவலகப்பகுதியில் விமான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. ஆளில்லா விமான drone செயற்பாடுகளை விமானப்படை கண்காணிக்கும்.

அன்றைய தினம் ராஜகிரிய பிரதேசத்தில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பாதுகாப்பும் பலபபடுத்தப்படவுள்ளது.பொலிஸ் விசேட அதிரடைப்படை அடங்களாக 1700 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.