ஹட்டனில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

229 0

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் ஓல்டன் பிரதான வீதியில், நேற்றிரவு காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியள்ளது.

மேற்படி விபத்து , நோர்வுட் மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி,  காரொன்று சுமார்  20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

இந்த சம்பவம் நேற்று இரவு பத்து மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அட்டனில் இருந்து மஸ்கெலியா சாமிமலை பகுதியை நோக்கி பயணித்த இந்த காரில் சென்ற எவருக்கும் பாதிப்பில்லையென பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.