மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன பதட்டத்தில் கொழும்பு.

379 0

கொழும்பை அண்மித்த மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றும் 2 சிறிய வெடி குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த வெடிகுண்டுகள் மொரட்டுவ, ராவதாவத்தப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.நாளை சென்ட் மேரிஸ் தேவாலயத்தில் ஆராதனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழி ஒன்றைத் தோண்டும் போது மீட்கப்பட்ட இக் கைக் குண்டுகளில் உயிர்ப்போடு இருந்த குண்டு ஒன்றை விமானப்படையினர் இரவு 8 மணியவில் வெடிக்கச் செய்து செயலிழக்க வைக்கப்பட்டது.