இரத்தினபுரி பகுதியில் 10 ஆயிரம் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிக்கான மின் விநியோகிக்கப்படும் மின்சாரக் கம்பியில் மரம் ஒன்று முறிந்து வீழுந்ததன் காரணமாகவே இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவாக மின்சாரத்தை மேற்படி பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மின்சக்தி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.