கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி: ஒருவர் கைது

316 0

பலங்கொடை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பலங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகாஹின்ன பகுதியில் நேற்று கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எல்ல – அம்பகாஹின்ன பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய  குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபருக்கும் , உயிரிழந்த நபருக்கும் இடையில் நீண்ட நாட்களாக காணி தொடர்பில் முரண்பாடுகள் நிலவி வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக இடம்பெற்ற வாக்குவாதத்தின் போதே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நீதிவான் பரிசோதனைகளின் பின்னர் பலங்கொட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

பலங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.