யாழ்ப்பாணம் நகரில் உள்ள வீடொன்றுக்கு கொள்ளையிடும் நோக்குடன் சென்றிருப்பார் என சந்தேகிக்கப்படும் ஒருவர், அந்த வீட்டின் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அவர் கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டதையடுத்து, அங்கு சென்று பார்த்த வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்ல தாமதித்ததனால் கிணற்றுக்குள் வீழ்ந்தவர் உயரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் சிறிதர் திரையரங்கிற்கு பின்புறமாக யாழ்.வீதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

