இஸ்ரேலில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நேதயாகு, தனது அரசுக்கான பெரும்பான்மை பலம் குறைந்ததையடுத்து, பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அதன்படி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பிரதமரின் ‘லிகுட்’ கட்சிக்கும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கன்ட்ஸ் தலைமையிலான ‘புளூ அண்ட் ஒயிட்’ கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி இருந்தது.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி வாக்கு எண்ணிக்கை நிலவரம் அமைந்தால், யார் வலுவான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களே ஆட்சியை கைப்பற்ற முடியும். நாட்டின் நீண்டகாலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேதன்யாகு வலுவான கூட்டணியை அமைத்து பிரதமர் பதவியை மீண்டும் தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.