பிக்கு மாணவர்களை தாக்கியவர் சிக்கினார்!

243 0

அனுராதபுரம், ஹொரவபொதான பகுதியில் பிக்கு மாணவர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் “உட்டியா” சமிந்தா கலபோடா என்ற அழைக்கப்படும் சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த இரு பிக்கு மாணவர்களையும் தாக்கும் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய காணொளியினை அடிப்படையாக கொண்டு முன்னெடுத்த விசாரணைகளின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.