கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் 2020 அபிவிருத்தி செய்யப்படும் – சாகல ரத்நாயக

227 0

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் குறிப்பிடத்தக்களவு முக்கித்துவத்தைப் பெற்றுவிட்டோம். தற்போது அதனைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.

அந்தவகையில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக தெரிவித்தார்.

கொழும்பு மாநகரத்தில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் இங்குறுகடை சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான நான்கு பாதைகளைக் கொண்ட மேம்பால நெடுஞ்சாலை நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றய தினம் கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டார்.