தேர்தலை வெற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீட்டு தொகையாக மாதாந்தம் 6ஆயிரம் ரூபா வழங்கவுள்ளது.
வடக்கு மாத்திரமல்ல தெற்கிலும் மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
காணாமலாக்கபட்டோர் என்று குறிப்பிடுபவர்கள் உண்மையில் காணாமலாக்க்கப்படவும், மரணிக்கவும் இல்லை. அவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளில் சுகபோகமாக வாழ்கின்றார்கள். காணமலாக்கப்பட்டோர் அலுவலகம் அரசியல் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டது என்று ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. தேர்தல் இடம் பெறவுள்ள தருணத்தில் வடக்கு மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் அரசாங்கம் காணாமலாக்கப்பட்டோரது உறவுகளுக்கு மாதம் 6000ம் ரூபாவினை வழங்கவுள்ளமை பொருத்தமற்றதாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

