தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்க தி.மு.க. இளைஞர் அணி மூலம் குளங்கள் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் நீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சி நாரணமங்கலத்தில் உள்ள திருவாசல்குளம் தூர்வாரும் பணி தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று காலை நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணியை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் எம்.பி விஜயன், முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கர், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா, நகரச்செயலாளர் பிரகாஷ், கூடூர் கிளைச்செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.