ஹங்குரன்கெத – மன்தாரம்நுவர பிரதேசத்தில் அமைந்துள்ள கொலபதன நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பிதுருதலாகலை வனப்பகுதிக்கு வழித்தவறி சென்ற 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மன்தாரம்நுவர பொலிஸார், வனவிலங்கு திணைக்களம் மற்றும் பிரதேசத்தின் சுற்றுலா வழிகாட்டிகளால் இரவு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நீர்வீழ்ச்சியை பார்வையிட தனது குடும்பத்தோடு சென்ற நிலையில், குறித்த சிறுவர்கள் வழித்தவறி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
பின்னர் , சிறுவர்கள் காணாமல் போயுள்ளதை அறிந்துக் கொண்ட பெற்றோர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து இரவு முழுவதும் சிறுவர்களை தேடியுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை கல் குன்று ஒன்றில் இருந்து மேற்படி சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.