சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வை ஜனாதிபதி நாளை அறிவிப்பார் : மஹிந்த அமரவீர

264 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அறிவிக்கவுள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள சுதந்திர கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டிலேயே ஜனாதிபதி இது தொடர்பில் அறிவிப்பார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எனினும் சுதந்திர கட்சி ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ, சஜித் பிரேமதாசவுக்கோ அல்லது கருஜய சூரியவுக்கோ ஆதரவளிக்காது. ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை உருவாக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.