நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
கடந்த மாதம் 2 ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியிருந்ததோடு புலமைப் பரிசில் பரீட்சையும் இடம்பெற்றது.
இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதோடு, விடைத்தாள் திருத்தும் மத்திய நிலையங்களாகக் காணப்படும் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

