தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை

326 0

நாட்டின் தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாறாக 5 வருடத்திற்குள் நாட்டில் அனைத்து கடன்களையும் சரி செய்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்றும் கூறினார்.

குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் கால்வாய் புனரமைப்பவன் இல்லை. நாட்டைக்கட்டியெழுப்புவபன். அதுவே என்னுடைய இலக்கு. எனவே நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பும் அனைவரும் எம்முடன் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன். இனவாதத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நாம் முயற்சிக்கவில்லை.

போலியாகக் கோசங்களை எழுப்பி போராட்டங்களைச் செய்வதால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. அவ்வாறு நாட்டை முன்னேற்ற முடியாது. நாம் ஒரு போதும் ஆட்சியை கைவிட்டுச் செல்லப் போவதில்லை.

ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது ஆட்சி முடிந்து விட்டது என்று கூறினார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் அரசாங்கம் தோல்வியடையும் என்று கூறினார்கள். ஆனால் நாம் மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டெழுந்துவிட்டோம். தற்போது சுற்றுலாத்துறை பிரயாணிகள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். இவ்வருடம் நவம்பர் மாதமாகும் போது முன்னரைப் போன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை சாதாரண நிலைக்கு திரும்பிவிடும் என்று உறுதியளிக்கின்றேன் என்றார்.