தலவத்துகொட, தலங்கம பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசேட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 9 கிலோ மற்றும் 45 கிராம் கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைபற்றியுள்ளனர்.
தலவத்துகொட பகுதியில் வசிக்கும் 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.