வவுனியா, செட்டிகுளம், அடியான்புளியங்குளம் பகுதியில் இன்று (25) இடம்பெற்ற விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இமருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை பகுதியில் இருந்து மடு தேவாலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றவர்களை ஏற்றிச்சென்ற வேனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பராயனங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.