நீர்கொழும்பில் 4 வாகனங்கள் தீவைப்பு

250 0

நீர்கொழும்பு பகுதியில் வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நீர்கொழும்பு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இவ்வாறு 4 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தின் போது இரு டிப்பர்கள் , கெப் ரக வாகனம் மற்றும் ட்ரெக் வாகனமொன்றும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். இவர் மது போதையில் இருந்ததின் காரணமாக இவரால் இந்த தீ மூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.