உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உணவகத்திற்குச் சென்று தாக்குதல் நடத்திவிட்டு அருகில் உள்ள ஒரு இடத்தில் மறைந்திருந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.