மண்மேடு சரிந்ததில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

359 0

மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மோகினி எல்ல பகுதியில் பாரிய மண் மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், கடும் மழை காரணமாக இம்மண்மேடு சரிந்துள்ளதாகவும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக உடன் அகற்றுவதற்கான பணிகளை நல்லத்தண்ணி பொலிஸாருடன் வீதி அதிகார சபை ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.