மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82 அடியை எட்டியது

516 0

மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது. தற்போது வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல்-மேட்டூர் இடையே காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அணையின் நீர்மட்டமும் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது.

மேட்டூர்  அணைக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கன அடியில் இருந்து 1.65 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15 அடி அதிகரித்து அணையின் நீர் மட்டம் 82.62 அடியாக உள்ளது.  அணையில் நீர் இருப்பு 44.61 டி.எம்சியாக உள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்படுகிறது.  மேட்டூர் அணையின் நீர் மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிரபார்க்கப்படுகிறது.