மதத்தை விடவும் மனித உயிர் பெறுமதியானது- காதினல் மெல்கம் ரஞ்ஜித்

234 0

மதத்தை விடவும் மனித உயிர் பெறுமதியானது எனவும், மதத்துக்காக மனித உயிரைக் கொலை செய்ய முடியாது எனவும், அவ்வாறு கொலை செய்தால் அது மகா பெரிய பாவமாகும் எனவும் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

கொடுகொடயில் இன்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சமகால உலகிலுள்ள மனிதர்கள் மனித உயிரை மதிக்காமல் நடந்துகொள்வதாகவும், அவ்வாறு நடந்து கொள்பவர்களை கடவுளின் படைப்பு என்றே கூறமுடியாது எனவும் காதினல் குறிப்பிட்டுள்ளார்.