கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயம்

301 0

பமுனுகம, தல்தியவன்ன கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் குறித்த மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உஸ்வெடகொய்யாவ மற்றும் வத்தள பகுதிகளை சேர்ந்த 53 மற்றும் 58 வயதுயைட இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

விபத்திற்கு உள்ளான மேலம் சில மீனவர்கள் காப்பற்றப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.