நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

230 0

நேபாள நாட்டில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாள நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மலன்கவா நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 42 பயணிகளுடன் இன்று ஒரு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
மலைபாங்கான சாலையில் பயணித்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்  திரிஷுலி ஆற்றில் கவிழ்ந்தது. அப்போது, ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் அனைவரும் தண்ணீருக்குள் மூழ்கி தத்தளித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் சிக்கிய 16 பேரை உயிருடன் மீட்டனர்.
ஆனால், மீட்பு குழுவினர் வருவதற்கு முன்னர் தண்ணீரில் மூழ்கிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.