வடக்கு கிழக்கு உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை!

345 0

நாட­ளா­விய ரீதியில் 18 மாவட்­டங்­களில் 70–80 கிலோ மீற்­றரை விட அதி­க­மான காற்று வீசக் கூடும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இன்று காலை 9 மணி­வரை இந்த சிவப்பு எச்­ச­ரிக்கை நடை­மு­றை­யி­லி­ருக்கும் என்றும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், முல்­லைத்­தீவு, வவு­னியா, திரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புரம், புத்­தளம், பொலன்­ன­றுவை, குரு­ணாகல், மாத்­தளை, கண்டி, கம்­பஹா, கொழும்பு, நுவரெ­லியா, மற் றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு வடக்கு வட­மத்­திய வட மேல் மாகா­ணங்­க­ளிலும் திரு­கோ­ண­மலை மற்றும் மாத்­தளை மாவட்­டங்­க­ளி லும் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 70–80 கிலோ மீற்றர் அதி­க­ரித்துக் காணப்­படும்.நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து மட்­டக்­க­ளப்பு வழி­யாக மன்னார் காங்­கே­சன்­துறை மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய கடற்­ப­ரப்­புக்­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 60–70 கிலோ மீற்றர் வீசும் என்று வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.எனினும் பகல் அல்­லது இரவு வேளை­களில் கடற்­பி­ர­தே­சங்­க­ளிலும் காற்றின் வேக­மா­னது 80 கிலோ மீற்­றரை விட அதி­க­ரிக்­கலாம் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே குறிப்­பிட்ட கடற்­ப­ரப்பில் மீன்­பி­டிக்கு செல்ல வேண்டாம் என்று மீன­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது