பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

255 0

கம்பஹா மாவட்ட பூகொட – மண்டாவில பகுதியில் நபரொருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் பிரிதொருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக  மாறியமையினாலே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

இந்த கொலை சம்வபம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. குறித்த நபரை சந்தேகநபர் பொல்லால் தாக்கி காயப்படுத்திய பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

இதன்போது படுகாயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மண்டாவில பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ராஜபக்ஷகே லலித் ராஜபக்ஷ என்பவராவார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.