பெற்றக் குழந்தையைத் தாக்கிய தந்தைக்கு கிடைத்த தண்டனை!

275 0

திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் முது ஆருந்திவிட்டு ஒரு வயது குழந்தைக்கும், மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர் மது போதையுடன் ஒரு வயது குழந்தையை தாக்கியதாகவும் இவ்வாறு தினமும் மது போதையுடன் மனைவி பிள்ளைகளை சந்தேக நபர் தாக்குவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குழந்தையும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.